ஒன்றிணைவோம் வா திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவிகளை வழங்கிடுவீர் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்.
களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம் என்று தொடங்கி, மே 7ம் தேதி அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே உயிர்வளி உற்பத்தியைப் பெருக்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் அமைப்புகளும் உயிர்வளி செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன.
தேர்தலுக்கு முன்பாகவே ‘ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினோம். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கி கழகத்தினர் மேற்கொண்ட பணிகள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதாக இருந்தது.
நம் அரசு அமைந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உயிர்வளி, ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி என உயிர் காக்கும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கழகத்தின் சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தை மீண்டும் தொடங்கிட வேண்டும் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகத்தினர் மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது.
பொறுப்புடனும் – தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் அரசின் தனி மனித இடைவெளியைக் விதிமுறைகளுக்குட்பட்டு கடைப்பிடித்து பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் நானும் உடன்பிறப்புகளைப் போலவே களத்தில் இருப்பேன் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…
சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…
வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும் தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…