‘குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம்’- அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு..!

எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், கருப்பு நிற உடை அணிந்து வந்து ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில், அதிமுகவினர் உறுதி மொழி ஏற்றனர். அதிமுக என்பது ஆயிரம் காலத்து பயிர், அதிமுக என்று ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியுமா? உடைத்து பார்க்க முடியுமா?  நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற சூழ் உரைப்போம்.

களங்கள் அனைத்திலும் வென்று கட்சியின் இமயமாய் உயர்த்திடுவோம். எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் எதிரிகளை விரட்டியடிப்போம், தூரோகிகளை தூள் தூளாக்குவோம். குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம் என உறுதிமொழி எடுத்த பின், நினைவிடத்தில் பழனிசாமி மற்றும் அதிமுகவினர் மௌன அஞ்சலி செலுத்தினார்.  

Leave a Comment