Categories: இந்தியா

PM Modi : சிந்தனைகள் பெரியதாக இருந்தால் பிரமாண்டமான இந்தியாவை உருவாக்க முடியும்.! புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முதல் நாளான நேற்று டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று முதல் சிறப்புக் கூட்டத்தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற உள்ளது.

நேற்று பழைய நாடாளுமன்றத்திற்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக பேசிய பிரதமர் மோடி, இன்று புதிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவர் கூறுகையில், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து விடைபெறுவது என்பது எனக்கு உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.

புதிய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், நடைபெறப்போகும் ஒவ்வொரு விவாதமும், இந்தியாவை மேம்படுத்த வேண்டும். இது நமது பொறுப்பும் ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பும் ஆகும். இங்கு என்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட்டாலும், இந்தியாவின் முன்னேற்றம் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஒரு சிறிய எண்ணத்தோடு  பெரிய இலட்சியத்தை அடைய முடியாது. நம் சிந்தனைகள் பெரிதாக இருக்க வேண்டும். அப்போதுதான்  பிரம்மாண்டமான இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும்.

இன்று இந்தியா புதிய உணர்வால் நிரம்பியுள்ளது. ஆற்றல் இந்த உணர்வு மற்றும் ஆற்றல் கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை தீர்மானங்களாக மாற்றி அந்த தீர்மானங்களை நனவாக்கும். இங்குள்ள சிலர் அப்படி நினைக்காமல் இருக்கலாம், ஆனால் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக உயரும் என்பதில் உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது.

தற்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் செல்கிறது. பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருந்த 370வது சட்டப்பிரிவு இந்த நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்படுவது நமது அதிர்ஷ்டம்.

வளர்ந்த இந்தியாவின் பார்வைக்கு உயிர் கொடுப்போம் என்ற உறுதிமொழியுடன், இன்று புதிய நாடாளுமன்றத்திற்கு செல்கிறோம். அது நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது மற்றும் நமது கடமைகளுக்கு நம்மை ஊக்குவிக்கிறது. 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்காக நாங்கள் மீண்டும் உறுதிஏற்கிறோம் என தெரிவித்தார்.

Recent Posts

பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை.! 8 பேர் கைது.!

சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன்…

18 seconds ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியை தருகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் !

மு.க.ஸ்டாலின் : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ்…

15 mins ago

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

10 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

11 hours ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

11 hours ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

16 hours ago