மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பர் போதைப்பொருள் வழக்கில் கைது!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பர் சித்தார்த் பிதானி போதைப்பொருள் வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகராகிய சுஷாந்த் சிங் அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் குறித்து விசாரிக்கையில் இவருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. அவரது மரணத்திற்குப் பின் போதை பொருள் தொடர்பு குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து சுஷாந்த் சிங்கிற்கு போதைபொருள் வழங்கியதாக அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி , ரியாவின் தம்பி, வீட்டு வேலைக்காரர்கள் உள்ளிட்டவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது ரியா உட்பட சிலர் ஜாமினில் வெளியாகி உள்ளனர்.

இதன் பின்பு சுஷாந்த் சிங்கின் வீட்டில் தங்கியிருந்த அவரது நண்பரான சித்தார்த் பிதானியை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய தீவிர விசாரணையில் சித்தார்த் ஹைதராபாத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த புதன்கிழமை சித்தார்த்தை கைது செய்துள்ளனர்.

பின் உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அவர் மும்பை அழைத்து வரப்பட்ட நிலையில், மும்பை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் அவரை அதிகாரிகள் ஆஜர்படுத்தி உள்ளனர். அப்பொழுது  வாட்ஸ்அப் உரையாடல் மூலமாக சித்தார்த் போதைபொருள் வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சுஷாந்தின் காதலியான நடிகை ரியா, சோஃபிக் மற்றும் சுஷாந்தின் மேலாளர் மற்றும் வேலைக்காரர்களிடம் இவருக்கு போதைப்பொருள் தொடர்பான தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கேட்டு கொண்டதை அடுத்து வரும் ஜூன் ஒன்றாம் தேதி வரை சித்தார்த்தை காவலில் வைத்து விசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு மும்பை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Rebekal

Recent Posts

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

4 mins ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

11 mins ago

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…

12 mins ago

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிய ஸ்ரீசங்கர் !! நீளம் தாண்டும் பதக்கம் கேள்வி குறி?

Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…

43 mins ago

மே 1 முதல் தமிழகத்தில் வெப்ப அலை… தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…

45 mins ago

தமிழகத்தையே உலுக்கிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு ஒத்திவைப்பு.!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…

48 mins ago