கொல்கத்தா மாடல் அழகி கொலை…! ஓலா டிரைவர் கைது ..!

பெங்களூரில் உள்ள கெம்பேவுடா சர்வதேச விமான நிலையத்தின் அருகே கடந்த ஜூலை 31- ம் தேதி பெண் சடலம் ஒன்று கிடந்தது. அந்த பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியும் , தலையில் பலத்த காயம் இருந்தது. போலீசார் அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

ஆனால் அப்பெண்  யார் என தெரியவில்லை இதையடுத்து போலீசார் டெல்லி , கொல்கத்தா ஆகிய இடங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்து அதன்படி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகி பூஜா சிங் தே என்பது தெரியவந்தது.

இந்நிலையில் மாடல் அழகி பூஜா செய்து கொலை வழக்கில் ஓலா கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ,கடந்த  ஜூலை 30-ம் தேதி பெங்களூரில் ஒரு ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த  பூஜா , நிகழ்ச்சி முடிந்த பின் மறுபடியும்  கொல்கத்தா செல்ல ஓலா கால் டாக்ஸியை  செல்போன் மூலம் அழைத்து உள்ளார்.

அப்போது டாக்சி டிரைவராக நாகேஷு என்பவர் பூஜாவை காரில் ஏற்றிக்கொண்டு சென்று உள்ளார். காரில் இருந்த பூஜா அழகாகவும், பணக்கார வீட்டுப்பெண்  போல இருந்தாலும் டிரைவர் நாகேஷு பூஜா கையில் இருக்கும் பையில் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என என்ணணியுள்ளார்.

நாம் ஒரே நாளில் பணக்காரனாகி விடலாம் நாகேஷு நினைத்தார். அதனால்  பூஜாவிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தன் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார். எனவே அதிக பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பூஜா மறுத்து உள்ளார்.

இதனால் டிரைவர் நாகேஷ் பூஜாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் பூஜா மயங்கி விழுந்தார். பின்னர் பூஜா எழுந்து உள்ளார். அதனால் அவர் சாகும் வரை பூஜாவை  கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர்  பூஜாவிடம் இருந்து கைப்பை மற்றும் 2 செல்போன்கள் எடுத்துக்கொண்டு  கைப்பையை திறந்து பார்த்த போது வெறும் 500 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.பின்னர் உடலை கெம்பேவுடா விமான நிலையத்தின் அருகே போட்டு விட்டு சென்றதாக போலீசார் கூறினார்.

Recent Posts

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

59 mins ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

8 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

8 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

14 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

14 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

14 hours ago