பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷாக்கு கொரோனா.!

பெங்களூரு தலைமையிடமான பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா நேற்று இரவு சோதனை மேற்கொண்டார் அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது என தெரிவித்தார்.

கொரோனா பாசிடிவ் செய்த பின் நான் கொரோனா எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகள் இருப்பதால் அது அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன் என்று 67 வயதான மஜும்தார்-ஷா தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த ட்வீட்-க்கு பதிலளித்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் கிரண்ஷா இதைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.