சிறுநீரக கல்லை அடித்து விரட்டுவோம்….!!!

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சிறுநீரக நோய். இந்த பலரை மரணம் வரையிலும் கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அதற்கான முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. காலையில் எழுந்ததும் வாழைத்தண்டுச் சாறு சாப்பிடு”, “பார்லி தண்ணீர் குடி!”, “சிறுகுறிஞ்சான் ஜூஸ் குடி” என்று இலவச ஆலோசனைகள் நிறையவே கிடைக்கும். இவை எல்லாமே சிறுநீரைப் பெருக்குகின்றன.

Image result for சிறுநீரக கல்

இந்தக் கற்களின் அளவு, எடை, வகை ஆகியவற்றைப் பொறுத்துத்தான் சிகிச்சை அமையும். சிறுநீர்க் கல்லிலும் சில வகை உண்டு. அவை: 1. கால்சியம் கற்கள். 2. யூரிக் அமிலக் கற்கள். 3. சிஸ்டின் கற்கள். 4. ஸ்டுரூவைட் கற்கள். இவற்றில் கால்சியம் கற்கள்தான் பொதுவாக இருக்கும். இவை கால்சியம் ஆக்சலேட், கால்சியம்  பாஸ்பேட் எனும் ‘வேதி உடை’ அணிந்திருக்கும்.

இந்த சிறுநீரக கற்களிலிருந்து விடுதலையாக சில வழிகள் :

முதல் வழி :

Related image

கோடைகாலங்களில் வெயிலில் அலையக் கூடாது. பெரும்பாலும் உடலில் ஏற்படும் தண்ணீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

இரண்டாவது வழி :

Image result for பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீரை

அதிகமான  தண்ணீர் அருந்துங்கள். கோடையில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி  ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது.

மூன்றாவது வழி :

Image result for உப்பைக் குறைக்க

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். உப்பு அதிகமானால், அதிலுள்ள சோடியமானது சிறுநீரில் கால்சியத்தைப் பெருக்கும். அந்தக் கால்சியம் சும்மா இருக்காது. ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் கூட்டுசேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கத்தான் இந்த யோசனை. தவிர, பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், பேக்கிங் சோடா உணவுகள்  போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இவற்றையும் தவிர்ப்பது நல்லது.

நான்காவது வழி :

Image result for இளநீர்

இளநீர், சிட்ரஸ் பழச்சாறு, வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை நிறைய அருந்த வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி, சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கனிகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தாவது வழி :

சிறுநீர்க் கல் உள்ளவர்களுக்குக் கோலிசோடா, கோக் பானம், மென்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் அதிகம். உலர் பழங்கள், பாதாம்பருப்பு, வாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, ப்ளம்ஸ், பீட்ரூட், ஸ்ட்ராபெரி, சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக்கீரையைச் சாப்பிட வேண்டாம்.இவற்றில் ஆக்சலேட் அதிகம்.

Image result for மீன், இறால், நண்டு, முட்டையின்

கம்பு, கேழ்வரகு, கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால், தயிர், வெண்ணெய், நெய், சீஸ், பால்கோவா, பால் அல்வா, பீட்ஸா போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். இதுபோல், டாக்டர் சொல்லாமல் சுயமாக கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள். ஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். அதிலுள்ள புரோட்டீன் ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும்; சிட்ரேட் அளவைக் குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீர்க் கற்களை உருவாக்கும்.

Leave a Comment