கொரோனா நோயாளிகளுக்கான அவசரகால கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம்!

கொரோனா நோயாளிகளுக்கு அவசர காலத்தில் பயன்படும் வகையில் கையடக்கமான ஆக்சிடென்ட் சிலிண்டர் கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை தற்பொழுது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் சில இடங்களில் காணப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஆக்சிஜன் உள்ளிட்ட கொரோனாவிற்கான மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்ட வண்ணம் உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் தான் அதிக அளவு ஏற்படுகிறது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பயன்படும் வகையில் தற்போது கேரளாவில் கையடக்கமான ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள கொல்லத்தை மையமாகக் கொண்ட ஏரோசில் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் ஆக்சி செக்யூர் பூஸ்டர் எனும் கையடக்கமான ஆக்சிஜன் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 10 லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவு இருக்குமாம், இந்த ஒரு சிலிண்டர் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் 225 முறை காற்றை உறிஞ்சிக் கொள்ளலாம். 150 கிராம் எடை கொண்ட இந்த சிலிண்டர் வீடுகளில் வைத்துக்கொள்வது மட்டுமின்றி, நாம் பயணம் செய்யும் போது கூட எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வண்ணம் இருக்குமாம். முக கவசம் போல சிலிண்டர் மேல் பொருத்தப்பட்டுள்ள சாதனத்தை பயன்படுத்தி எளிதில் சுவாசிக்கும் வகையில் இந்த கையடக்க சிலிண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டரை ஆஸ்துமா, நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், சுவாசக் கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பயன்படுத்தினால் உடனடியாக நிவாரணம் பெறலாம் எனவும் இந்த கையடக்க ஆக்கிஜான் சிலிண்டரை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

11 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

12 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

48 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago