கேரளா: அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ….!

கேரளாவில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட கூடிய ஊதியம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் கேரளாவில் பேருந்துகள் இயங்கவில்லை. எனவே பயணிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இருந்து இயங்கக்கூடிய பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பேருந்துகள் இயங்காததால் மருத்துவமனை, பள்ளிகள் என பேருந்தில் பயணிக்க கூடிய பலரும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.