கங்காரு வடிவிலான கேக்; வெட்ட மறுத்த ரஹானே.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்து வீடுதிரும்பிய ரஹானே, கங்காரு வடிவிலான கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். அவரின் இந்த செயல், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்து வருகிறது.

ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலரும் காயமடைந்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.

இந்த சுற்றுப்பயணத்தை முடித்து இந்திய வீரர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ரஹானே தங்கியிருந்த அபார்ட்மெண்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். ஆஸ்திரேலியா மண்ணில் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, கங்காரு வடிவிலான கேக்கை தயார் செய்து, அதனை வெட்டுவதற்காக அவர்முன் வைத்தனர்.

அந்த கேக்கை ரஹானேவிடம் வெட்டுமாறு கூறினார்கள். ஆனால் ரஹானே, அதனை வெட்ட மறுத்துவிட்டார். கங்காரு, ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய மிருகம் என்பதால், ரஹானே இந்த கேக்கை வெட்ட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ரஹானேவின் இந்த செயல், அவரின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Recent Posts

கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…

14 mins ago

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

41 mins ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

1 hour ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

2 hours ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

2 hours ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago