கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை ரத்து செய்யக் கோரி முறையீடு!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் முறையீடு.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. தாமாக முன்வந்து இதனை வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பரிசீலிக்க வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்துள்ளார்.

கோரிக்கை மனு அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் உள்ள நிலையில், வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வு கூறியுள்ளனர்.

மேலும், கோரிக்கை மனுவை கவனிப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட, கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆக.26-ல் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Leave a Comment