தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு.!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதி கருணாபுரத்தில் விஷச்சாராயம் விற்கப்பட்டதாக தெரிகிறது. அதனை அருந்தியதால் நேற்று பலர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விஷச்சாராயம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை ஏற்றுவருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 19 பேர், சேலத்தில் 9 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர் என இதுவரை 35 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, விஷச்சாராயம் குடித்து வீட்டிலேயே இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். வீடு வீடாகச் சென்று, வாந்தி, வயிற்று எரிச்சல் பாதிப்பு உள்ளோரை 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

Recent Posts

ஸ்வீட் பிரியர்களே..! இனிப்புச் சுவை பிடிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதாம்..

Sweet-இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வர காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இனிப்பு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவது  அதற்கு அடிமையாகி  இருப்பதோ அல்லது…

2 mins ago

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.! சென்னை புதிய கமிஷனர் அருண் அதிரடி.!

சென்னை: ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்போம். ரவுடிகளை ஒடுக்குவோம். - சென்னை மாநகர காவல் ஆணையர் அருண். சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக…

20 mins ago

யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி கூப்பிடுமா? புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஆய்வு : மனிதர்களைப் போலவே யானைகளும் மற்ற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக கென்ய நாட்டின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஆம், மனிதர்கள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு…

39 mins ago

கமல்ஹாசன் கூட ஒரு படம் தான் எடுக்க முடியும்.! நழுவிய இயக்குனர்கள்..?

கமல்ஹாசன் : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதை தாண்டி கதை, திரைக்கதை வசனம்  மற்றும் இயக்கம்  என பல விஷயங்களில் நன்கு அறிந்தவராக இருக்கிறார். இயக்குனராக அவர் ஹே ரேம்,…

42 mins ago

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன் – பார்த்திபன் செய்த செயல்..எகிறும் ‘டீன்ஸ்’ எதிர்பார்ப்பு!!

டீன்ஸ் : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக 'டீன்ஸ்' என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்து…

2 hours ago

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி.! ஆட்சியை தக்கவைத்த I.N.D.I.A கூட்டணி.!

ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில்…

2 hours ago