தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரம்: 4 பேர் உயிரிழந்த நிலையில் முக்கிய நபர் கைது.!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதிக்கு அருகே உள்ள கருணாபுரத்தில் சந்தேகத்திற்கிடமாக 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 25க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. உடல்நிலை மோசமடைந்த 4 பேர் ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியம் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். ஆய்வு நடத்திய பிறகு, இந்த இறப்பிற்கான முழு காரணத்தையும் கண்டறிந்து முழு விவரத்தையும் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கள்ளச்சாராயத்தால் இறந்ததாக கூறப்படும் 4 நபர்களும் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் புதிய தகவல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்படவுள்ளது. முழு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கள்ளச்சாராயத்தால் இறப்பா என உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Recent Posts

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி.! ஆட்சியை தக்கவைத்த I.N.D.I.A கூட்டணி.!

ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில்…

37 mins ago

பிசிசிஐ அளித்த ரூ.125 கோடி பரிசு தொகை ..! யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா ..?

பிசிசிஐ : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர். அதனை இந்திய வீரர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்கள் என்பதை…

43 mins ago

மக்களே கவனம்! நாளை இந்த இடங்களில் எல்லாம் மின்தடை!!

மின்தடை  : நாளை ( ஜூலை 9 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடசென்னை  மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை,…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ! இபிஎஸ் பரபரப்பு குற்றசாட்டு.!

சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி…

1 hour ago

என்ன நடந்தாலும் அதை மட்டும் மாற்றக்கூடாது…அபிஷேக் சர்மாவுக்கு அப்பா கூறிய அட்வைஸ்!!

அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக…

2 hours ago

தமிழகத்தில் இவர்கள் மட்டும் இனி கட்டணமின்றி மண் எடுக்கலாம்.!

சென்னை : பாசனத் தொட்டிகள், குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து வண்டல்மன் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள்…

2 hours ago