கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து கனமழை காரணமாக ஒரு வாரம் முன் ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது நிலச்சரிவிலிருந்து மேலும் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
இதில், 22 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கயத்தாரில் ராஜமலை நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
கயத்தாரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும் நிலச்சரிவில் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாரு கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துளார். நிலைமை சீரான பிறகு உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய உரிய ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…