#JustNow: இதில் விரைவில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் அறிவிப்பு

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தகவல்.

நாமக்கல் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், அதிகப்படியான பால் வழங்கும் முதல் மூவருக்கு கேடயமும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார். இதனிடையே, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவினில் விரைவில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிதாக ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும் எனவும் கூறினார். மேலும், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழகத்தில் நோட்டாவை கூட பாஜக மிஞ்ச முடியாது எனவும் தெரிவித்தார்.

Leave a Comment