இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) மும்பை,நடத்தும் ஜேஇஇ அட்வான்ஸ்டு 2022 தேர்வுத் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி,JEE அட்வான்ஸ்டு 2022 தேர்வானது வருகின்ற ஆகஸ்ட் 28 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இத்தேர்வானது ஜூலை 3 அன்று நடத்த திட்டமிடப்பட்ட நிலையில்,தற்போது தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.அதன்படி,JEE மேம்பட்ட 2022 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நடைபெற உள்ளது.
கடைசி தேதி:
எனவே,திருத்தப்பட்ட அட்டவணையின்படி,விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 12 ஆகும்.JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கு வரவிருக்கும் விண்ணப்பதாரர்கள்,ஆகஸ்ட் 23 முதல் 28 வரை அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும்,ஹால் டிக்கெட்டுகள் https://jeeadv.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அட்டவணையின்படி, JEE அட்வான்ஸ்டு 2022 தேர்வானது காலை மற்றும் மதியம் என இரண்டு ஷிப்டுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
தேர்வு முடிவு:
அதன்படி,தாள் 1 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், தாள் 2 மாலை 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் நடத்தப்படவுள்ளது.மேலும்,JEE மேம்பட்ட 2022 தற்காலிக விடை நகலை வெளியிடுவதற்கான தேதி செப்டம்பர் 3 என்றும்,அதன் பிறகு, விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிக்கு இடையில் தற்காலிக பதில் மீதான ஆட்சேபனைகளைத் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில் அதிகாரப்பூர்வ விடை நகல் மற்றும் தேர்வு முடிவு செப்டம்பர் 11-ம் தேதி வெளியிடப்படும்.
AAT தேர்வு:
இதற்கிடையில்,ஆர்க்கிடெக்சர் ஆப்டிட்யூட் டெஸ்ட் (AAT) 2022 க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தற்போது திருத்தப்பட்ட அட்டவணையின்படி செப்டம்பர் 11 முதல் 12 வரை நடைபெறும். AAT 2022 தேர்வானது செப்டம்பர் 14 அன்று நடைபெறும்,அதன் முடிவு செப்டம்பர் 17 அன்று அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…