IPL MI vs PBKS: டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு..!

ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs PBKS போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே  ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக  பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த உற்சாகத்தில் இன்று நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் களமிறங்குகிறது. பஞ்சாப் அணி, தனது கடைசி போட்டியில் பெங்களூர் அணியுடன் தோல்வியடைந்த நிலையில் இன்றைய போட்டியை எதிர்கொள்கிறது.

மேலும், புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், பஞ்சாப் அணியும் அதே 6 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் இருக்கின்றன. இன்றைய போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக பந்துவீச உள்ளது.

மும்பை அணி: 

ரோஹித் சர்மா(C), இஷான் கிஷன்(W), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

பஞ்சாப் அணி:

அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன்(C), ஜிதேஷ் சர்மா(W), ஹர்பிரீத் சிங் பாட்டியா, ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

Leave a Comment