#IPL BREAKING: ராஜஸ்தான் போராட்டம் வீண்..! பெங்களூரு அணி த்ரில் வெற்றி..!

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs RR போட்டியில் பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் தொடரின் இன்று இருபோட்டிகள் நடைபெறும் நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பெங்களுருவில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, ராஜஸ்தான் அணியில் முதலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் களமிறங்கிய ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடிய நிலையில் பட்லர் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து, தேவ்தட் படிக்கல் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். முடிவில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 183 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் களமிறங்கிய பெங்களூரு அணியின் கோலி வந்த வேகத்தில் களத்தை விட்டு வெளியேறினார். ஆனால் டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடி பந்துகளை பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். பிறகு பிளெசிஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததையடுத்து மேக்ஸ்வெல் களமிறங்கி சிக்ஸர்களை பறக்கவிட்டு 77 ரன்களை குவித்தார்.

அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல் அஸ்வின் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் வில்லி மற்றும் சிராஜ் களத்தில் இருக்க 189 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி, ராஜஸ்தான் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 62 ரன்களும், மேக்ஸ்வெல் 77 ரன்களும் குவித்துள்ளனர். ராஜஸ்தான் அணியில் போல்ட் மற்றும் சந்தீப் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Leave a Comment