#IPL BREAKING: மழையால் தடைபட்ட போட்டி..! ஆட்டம் நாளை ஒத்திவைப்பு..!

ஐபிஎல் தொடரின் இறுதிச்சுற்று போட்டி மழையின் காரணமாக நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று மற்றும் பிளேஆப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இன்று நடைபெறவிருந்த இறுதி சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதவிருந்தன.

இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. ஆனால், மைதானத்தில் மழையானது விட்டுவிட்டுப் பெய்யத் தொடங்கியுள்ளதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, போட்டி 9.35 மணிக்கு தொடங்கும் பட்சத்தில் ஓவர்கள் இழப்பில்லாமலும், போட்டி 11:56 மணிக்கு தொடங்கினால் இரு அணிகளும் ஐந்து ஓவர்கள் கொண்ட ஆட்டத்திலும் விளையாடுவார்கள் எனக் கூறப்பட்டது.

இதற்கான கட்-ஆஃப் நேரம் நள்ளிரவு 12.06 ஆக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது, மழை விடாமல் பெய்த காரணமாக ஆட்டம் நாளை (திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.