ஆப்கானிலிருந்து இந்தியா வந்திறங்கிய ஆப்கான் அமைச்சர் கணீர் மல்க பேட்டி!

ஆப்கானிலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக இந்தியா வந்திறங்கிய ஆப்கான் அமைச்சர் நரேந்திர சிங் கால்சா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கான் நாட்டில் உள்ள மக்கள் பலரும் பிற நாடுகளுக்குள்  அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய மக்கள் மற்றும் வெளியேற விரும்பக்கூடிய ஆப்கான் நாட்டினரும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலமாக இன்று இந்தியா வந்திறங்கிய ஆப்கான் அமைச்சர் நரேந்திர சிங் கால்சா அவர்கள் ஆப்கானில் 20 ஆண்டுகளாக ஆப்கானில் எட்டப்பட்ட வளர்ச்சி தற்போது 0 ஆக உள்ளதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ,