இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் சர்வதேச அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாக உள்ளார்.

இந்த நிலையில் மயங்க் அகர்வால், திரிபுரா மாநிலத்தின் அகர்டலாவில் இருந்து சூரத் செல்ல விமானம் ஏறினார். அப்போது அவருக்கு திடீரென தொண்டை மற்றும் வாயில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அகர்டலாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

கேலோ இந்தியா போட்டி – தமிழ்நாட்டிற்கு மேலும் 2 தங்கம்!

இருப்பினும், மயங்க் அகர்வாலின் உடல்நலப் பிரச்சினையின் தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பான முழு தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் மயங்க் அகர்வால் விரைவில் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment