சிவம் துபே, ஜெய்ஸ்வால் அதிரடி.. தொடரை கைப்பற்றிய இந்தியா ..!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இரண்டாவது டி20 போட்டி இந்த ஊரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட்  மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி  முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதில் அதிகபட்சமாக குல்பாடின்  57 ரன்களும், நஜிபுல்லா 23 ரன்களும், முஜீப் 21 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் மூன்று விக்கெட்டும், ரவி பிஷ்னோய், அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட்டும், சிவம் துபே ஒரு விக்கெட் பறித்தனர்.  173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.4  ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அண்ணாமலையின் பகல் கனவு… தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் ! அரசு திட்டவட்டம்.!

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 68 ரன்களும், சிவம் துபே 63* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில்  இருந்தார். முதல் போட்டி போலவே இந்த போட்டியிலும் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

முதல் போட்டியில் சிவம் துபே 60* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதேபோல இந்த போட்டியிலும்  சிவம் துபே 63* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.  இந்த போட்டியில் சிவம் துபே 31 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். கடைசி மற்றும் மூன்றாவது போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.