தொடர் மழை: புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகம் மட்டும்மின்றி புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெறவிருந்த புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும், ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வு தேதி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர் மழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.!

இதற்கிடையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும், மீனவர்கள் தங்களது படகு, உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க புதுச்சேரி மீன்வளம், மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.