கோலாகலமாக தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் 2020 திறப்பு விழா..!

ஜப்பானில்,டோக்கியோ ஒலிம்பிக் 2020 திறப்பு விழாவானது தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டியானது,நடப்பு ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கியுள்ளது.இந்த விழாவில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே,ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக்,பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோபைடெனின் மனைவிஜில் பைடன், மங்கோலிய பிரதமர் லுவ்சன்னாம்ஸ்ராய் ஓயுன்-எர்டேன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும்,விழாவுக்கான அணிவகுப்பில் அகரவரிசைப்(alphabetic) படி இந்தியா 21 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.இந்த தொடக்க நிகழ்ச்சியில்,இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ளிட்ட 20 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும்,குத்துச்சண்டை வீரர் எம் சி மேரி கோம் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஜப்பான் தேசிய மைதானத்தில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வருவார்கள்.

சிறப்பு:

இது வேறு எப்போதும் நடைபெறாத வகையிலான ஒலிம்பிக் போட்டியாகவுள்ளது.ஏனெனில்,ஒலிம்பிக்கின் 125 ஆண்டுகால நவீன வரலாற்றில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் தொடங்கியுள்ளது.அதுமட்டுமல்லாமல்,விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்கள் தாங்களாகவே பதக்கத்தை எடுத்து அணிந்து கொள்ள வேண்டும்.

மேலும்,கொரோனா பரவல் காரணமாக ஜப்பானில் எந்த ரசிகர்களும் அனுமதிக்கப்படாததால், பார்வையாளர்கள் இல்லாத முதல் விளையாட்டு என்ற பெருமையை தற்போது டோக்கியோ ஒலிம்பிக் கொண்டுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் :

  • டேபிள் டென்னிஸ் – ஷரத் கமல்,மாணிக்க பத்ரா,சத்தியன் ஞானசேகரன்.
  • படகு போட்டி -அசோக் தாக்கர் & கே.சி. கணபதி,நேத்ரா குமனன்.
  • ஃபென்சிங் – சி.ஏ.பவானி தேவி.
  • தடகளம் – ராஜீவ் அரோக்கியா,தனலட்சுமி சேகர்,வி ரேவதி,சுபா வெங்கடேஷ் மற்றும் நாகநாதன் பாண்டி ஆகிய தமிழக விளையாட்டு வீரர்கள் உள்பட இந்திய அணி சார்பாக மேரிகோம்,பி.வி சிந்து போன்ற மொத்தம் 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

Recent Posts

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

47 seconds ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

53 seconds ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

10 mins ago

வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…

48 mins ago

‘அவர் எனக்கு இன்னோரு மகன்’ ! ரிஷப் பண்ட் குறித்து கவலைப்பட்ட நடிகர் ஷாருக்!!

Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின்…

53 mins ago

பும்ராவின் ஆட்டம் மந்தமா இருந்துச்சு! விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும்…

1 hour ago