நான் சரியான மனிதன் கிடையாது! என்னை உருவாக்கியது என் ரசிகர்களே! பிரபல நடிகரின் அதிர்ச்சி கடிதம்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரது நடிப்பில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், மே 17-ம் தேதியுடன், நடிகர் தனுஷ் தமிழ் துறைக்கு வந்து 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதனையடுத்து தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” துள்ளுவதோ இளமை” படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றும், நான் சரியான மனிதன் கிடையாது. ஆனால், ரசிகர்களின் அளவுகடந்த அன்பு என்னை பண்படுத்தி வளர்ந்திருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

Leave a Comment