3 படத்துக்கு கதை எழுதிவிட்டேன் – ஊரடங்கில் நடிகர் சின்னி ஜெயந்த் செய்த சாதனை!

ஊரடங்கில் 3 படங்களுக்கு கதையையும், ஒரு புத்தகத்தையும் தயாரித்துள்ள நடிகர் சின்னி ஜெயந்த்.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட கூடாது என்பதற்காக இந்தியாவில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில், எப்பொழுதும் பிசியாக வெளியிலேயே சுற்றி திரிந்த நடிகர் நடிகைகள் கூட தற்பொழுது வீட்டுக்குள் தான் முடங்கியிருக்கிறார்கள். பலரும் வீட்டில் தங்களது வாழக்கை எப்படி இருக்கிறது என்று கேட்டல் மனைவிக்கு உதவி செய்வததையும் சமைத்ததையும் சொல்லி வந்தனர்.

இது குறித்து பேசிய நடிகர் நடிகர் சின்னி ஜெயந்த், தான் இதுவரை இருந்த ஊரடங்கு நாட்களில் மூன்று படங்களுக்கு கதை எழுதி விட்டதாகவும், வெற்றி பாதை எனும் ஒரு புத்தகமே எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 மேலும், பலர் மன அழுத்ததுடன் இருப்பதாகவும், இதனால் அவர்களை நகைச்சுவை கூறி சிரிக்க வைத்ததாகவும் தனது வீட்டுக்கு  அருகில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கியதாகவும் கூறியுள்ளார்.