தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு-1 டம்ளர், கடலைப்பருப்பு-2டேபிள் ஸ்பூன், அரைக்கீரை – 1 கட்டு(பொடியாக நறுக்கியது), கருவேப்பிலை – 2 கொத்து பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது, இஞ்சி -2 இன்ச் அளவு(பொடியாக நறுக்கியது), பெருங்காயத்தூள் – 1/4 கால் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு வடை மாவு போல அரைத்து கொள்ள வேண்டும். இந்த மாவில் நறுக்கி வைத்துள்ள அரைக்கீரை, கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது வடை மாவு தயாராகிவிட்டது. அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் எப்பொழுதும் மெதுவடை சுடுவது போல எண்ணெய்யில் போட்டு பொன்னிறம் வந்தவுடன் எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சூடான சுவையான ஆரோக்கியமான கீரை வடை ரெடி. இதை நிச்சயமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். கீரை வடையை வீட்டில் செய்து பாருங்கள்.
குறிப்பு: உளுந்து மாவின் அளவை விட கீரையின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…