இவரது மறைவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் இழப்பு – திருமாவளவன்

முலாயம்சிங் யாதவ் அவர்களின் மறைவுக்கு திருமாவளவன் இரங்கல். 

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான முலாயம் சிங் யாதவ், கடந்த ஒரு வாரமாக  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர், தலைவர் திரு.முலாயம்சிங் யாதவ் அவர்களின் மறைவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் இழப்பு. அவர் சமூக நீதியின் மீட்பர். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர்.விசிக சார்பில் அவரது குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment