தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூன் 16, 17, 18 ஆகிய நாட்களில் மேற்கண்ட மாவட்டங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழையும் பொழிய வாய்ப்புள்ளது.
ஜூன் 19 ஆம் தேதி கடலோர மாவட்டங்களிலும் அருகில் இருக்கும் இடங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மற்ற மாவட்டங்களில் வறண்ட சூழ்நிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா, வங்கக்கடல் பகுதியில் இன்றும் நாளையும் பலத்த காற்று வீசவுள்ளது. இன்றிலிருந்து ஜூன் 18 வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் காற்று வீச உள்ளது. இன்றிலிருந்து ஜூன் 19 வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசவுள்ளது. இதனால் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவித்துள்ளது.
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…