அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி. 

சென்னை, அண்ணா மேலாண்மை  நிலையத்தில், குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்ற 36 தமிழக மாணவர்களுக்கு முதல்வர், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

பின் அந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் அண்ணா மேலாண்மை  நிலையம் அமைந்துள்ளது. சமூக நீதியை கடைபிடிக்கும் வண்ணம் அண்ணா மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தரவில் வெற்றி பெற 36 பேரில், 16 பேர் அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்.

 மேலும், மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவர் இதில் தேர்வாகியிருப்பது எனக்கு மிகவும் தேனிலும் இனிமையான செய்தியாக இருந்தது. அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி என்றும், அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் அதிகாரிகளுக்கு உள்ளது.

இந்திய அளவில் உயர் பதவியில் இருக்கும்போது பிறந்த மண்ணையும் தாய்மொழியையும் மறக்கக்கூடாது. அரசு வசதிகளை சிதைக்க நினைக்காமல் நேர்மையாகவும், தூய்மையாகவும் பணியாற்றவேண்டும். பிரச்சினையை கண்டு பயந்து ஓடாமல் எங்கிருந்து கிளம்பியது என்று ஆராய வேண்டும் என்றும் கூறினார்.