லாட்டரியில் ரூ. 20 கோடி…சாமி தரிசனத்திற்கு சென்ற நபருக்கு அடித்தது அதிர்ஷ்டம்.!

கேரள லாட்டரி மூலம் புதுச்சேரியை சேர்ந்த பக்தருக்கு ரூ.20 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது. கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கலில், எக்ஸ் சி 224091 என்ற லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு விழுந்தது.

சபரிமலை யாத்திரையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் இருந்த வந்த புதுச்சேரியைச் சேர்ந்த 33 வயதான தொழிலதிபர், கேரளாவின் இரண்டாவது மிக உயர்ந்த லாட்டரி பரிசான ரூ.20 கோடி கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பரை பரிசை வென்றுள்ளார்.

பத்மநாப ஸ்வாமி கோவிலின் கிழக்கு நாடா லட்சுமி சென்டரில் உள்ள துணை ஏஜென்டிடம் வெற்றி பெற்ற டிக்கெட்டு உட்பட டிக்கெட்டுகளை வாங்கியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பரிசு பெற்ற டிக்கெட்டை தேவையான ஆவணங்களுடன் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரகத்தில் ஒப்படைக்கும் போது, தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர், அந்த நபர் தனது பெயரையோ அல்லது முகவரியையோ ஊடகங்களுக்கு தெரிவிக்கவும் மறுத்துவிட்டார். ஆனால், சபரிமலை ஐயப்பன் தரிசனத்தை முடித்துவிட்டு திருவனந்தபுரம் வந்தபோது, இந்த லாட்டரி சீட்டை வாங்கியதாக அவர் தெரிவித்தார்.

காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு.. பாஜக எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது – உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் என்பது திருவோணம் பம்பருக்குப் பிறகு இரண்டாவது அதிக பரிசுத் தொகை கொண்ட லாட்டரி சீட்டு ஆகும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் முதல் பரிசாக ரூ.20 கோடியும், இரண்டாம் பரிசாக தலா ரூ.1 கோடியும் 20 பேருக்கு வழங்கப்பட்டது. முதல் பரிசை வெல்பவருக்கு வரி மற்றும் ஏஜென்ட் கமிஷன் கழித்த பிறகு சுமார் ரூ.12 கோடி கிடைக்கும்

Leave a Comment