தமிழக காவல்துறையில் மகளிர் காவலர்களின் பொன்விழா..! சிறப்பு தபால் தலையையும் வெளியிட்ட முதல்வர்…!

ரூ. 8.5 கோடி செலவில் பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வுக்கான “அவள்” திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில், நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டார். மேலும், ரூ. 8.5 கோடி செலவில் பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வுக்கான “அவள்” திட்டத்தை தொடங்கிவைத்தார்.

Leave a Comment