பாய்ச்சுங் பூட்டியா: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பைச்சுங் பூட்டியா தற்போது அரசியலிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார். சிக்கிமில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகுவதாகக் அவர் கூறி இருக்கிறார்.
இவர் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் துணை ஜனாதிபதி ஆவார். சமீபத்தில் முடிவடைந்த 2024 ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் பாய்ச்சங் பூட்டியா, சிக்கிம் ஜனநாயக முன்னணி (Sikkim Democratic Front-SDF) கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியை அடைந்தார்.
இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 6-வது முறையாக தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியின் காரணமாகவே தற்போது இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசிய போது,” சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிஎஸ் தமங் மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) ஆகியோருக்கு நான் இப்பொது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த 2024 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தேர்தல் அரசியல் எனக்கு மட்டும் இல்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே அனைத்து வகையான தேர்தல் அரசியலிலிருந்தும் உடனடியாக விலகுகிறேன்”, என்று கூறினார்.
ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே…
மின்தடை : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடக்கு கோவை துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம்,…
மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…