Heavy Rain in Chennai Airport [File Image]
கனமழை: சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வண்ணம் நேற்று நள்ளிரவு தலைநகர் சென்னையில் உட்பகுதி மற்றும் புறநகர் என பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் சிறிய அளவில் மழைநீர் தேங்கும் நிலை உருவானது. வெவ்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சரிந்தன.
நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக இன்று துபாய், டெல்லி, புனே செல்லும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. கனமழை காரணமாக விமானங்கள் தாமதமாக செல்லும் நிலை உருவானது.
சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லி பகுதியில் 10.4 செமீ அளவுக்கு மழை பெய்தது எனவும், சோழிங்கநல்லூர் பகுதியில் 8.2 செமீ மழை பெய்தது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக…
பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில்…
சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த…
ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என…
ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின்…
தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில்…