நயன்தாராவால் இணையும் விஜய் -அஜித்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் என்றால் நயன்தாரா விக்னேஷ் சிவன் என்று கூறலாம். இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரிசார்டில் நடைபெறவுள்ளதாக பத்திரிகை ஒன்று வைரலானது.

அன்றிலிருந்து இவர்கள் திருமணம் குறித்த தகவல் தினம் தினம் இணையத்தில் பரவி கொண்டே தான் வருகிறது. அந்த வகையில்,  மகாபலிபுரத்தில் வைத்து நடைபெறும் இவர்களின் திருமணத்தில் 20 பிரபலங்கள்  பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த 20 பேரில்  ரஜினி , கமல், அஜித், விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பிறகு அஜித், விஜய் இருவரும் நயன்தாரா திருமணத்தின் மூலம் சந்தித்தால் ரசிகர்கள் சந்தோசம் என எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

Leave a Comment