திமுக-வை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – டிடிவி தினகரன்

திமுகவை வீழ்த்த பொது வேட்பாளரை அறிவித்தால் நாங்களும் யோசிப்போம் என டிடிவி தினகரன் பேட்டி. 

இன்று காலை பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்திருந்தார்.

அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருவரையும் சந்தித்தோம் . எங்கள் கட்சி தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பெயரில் அவர்களை சந்தித்து ஆலோசித்தோம். இருவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்தோம் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கூறுகையில், 2021 தேர்தலிலேயே ஒன்றிணைந்திருக்க வேண்டும். 2021ல் திமுக-வை தோற்கடிக்க கூட்டணிக்கு தயாராக இருந்தேன். திமுக-வை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

திமுகவை வீழ்த்த பொது வேட்பாளரை அறிவித்தால் நாங்களும் யோசிப்போம்; நாங்கள் அகங்காரத்தில் பேசுவது இல்லை, எதார்த்தவாதிகள்; அவசரப்பட்டு நாங்கள் எதையும் சொல்ல விரும்பவில்லை எனதெரிவித்துள்ளார்.

Leave a Comment