புறப்பட்ட 15 நிமிடத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்.! பின்னர் நடந்த சோகம் .!

  • நேற்று முன்தினம் நள்ளிரவு 0 .15 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து ஸ்பைஸ்ஜெட் எஸ் ஜி 406 விமானம் புறப்பட்டது.
  • பயணி நெஞ்சு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து விமானம் இந்தூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மருத்துவமனையில் பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 0 .15 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து ஸ்பைஸ்ஜெட் எஸ் ஜி 406 விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் இருந்த ஒரு பயணி விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து விமானம் 0 .31 இந்தூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணி நெஞ்சு வலிப்பதாக கூறிய அடுத்த சில நொடிகளில் விமானி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அங்கு தயாரான நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் இருந்தன.

பின்னர் அந்த பயணியை பாந்தியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து இந்தூர் எம் ஒய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பயணி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக விமான நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.