சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள்.. மலர்தூவி மரியாதை செலுத்திய இபிஎஸ்.!

இன்று விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினம். இதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினார்.

இன்று சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன், தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.