போதைப்பொருள் கடத்தல் மன்னனை காணவில்லை.. ஈக்வடாரில் வெடித்த கலவரம்.!

ஈக்வடார் நாட்டில் கைது செய்யப்பட்டு குவாயாகில் சிறையில் இருந்த பிரபல போதை பொருள் கடத்தல் தலைவன் அடோல்போ மசியாஸ் கடந்த ஞாயிற்று கிழமை காணாமல் போனார். இதனை தொடர்ந்து அடோல்போ மசியாஸ் இறந்துவிட்டதாக கருதி ஈக்வடார் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ள கைதிகள்  சிறையினுள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த போர்!! ஹிஸ்புல்லாவை எச்சரிக்கும் இஸ்ரேல்! நடந்தது என்ன?

மேலும், ஈக்வடார் நாட்டின் வெளியிலும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இதனால் காவலர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். குவாயாகில் (Guayaquil ) உள்ள ஒரு தொலைக்காட்சி சேனல் ஒன்றில் புகுந்த கலவரக்காரர்கள் துப்பாக்கி முனையில் பலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்தனர். மேலும் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட வீடியோவும் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பள்ளிகளில் ஆசிரியர்களையும், மாணவர்களையும், பல்வேறு இடங்களில் பொதுமக்களை அடோல்போ மசியாஸ் ஆதரவாளர்கள் துப்பாக்கி முனையில் பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, ஈக்வடார் நாட்டின் பிரதமர் டேனியல் நோபோவா நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் , நாட்டின் பாதுகாப்புப்படை, ஆயுதப்படையை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.

திங்களன்று அந்நாட்டு பிரதமர் நோபோவா கூறுகையில், நீங்கள் தீவிரவாதத்தை கையில் எடுத்தீர்கள். நாங்கள் அதனை கொண்டு உங்களுக்கு பதிலடி தருவோம். பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். அனைத்து ஈக்வடார் மக்களுக்கும் அமைதி திரும்பும் வரை நாங்கள ஓய்வெடுக்க மாட்டோம் என நோபோவா தெரிவித்துள்ளார்.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

28 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

32 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

50 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

53 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

53 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago