நிலவின் வட்டப்பாதைக்கு செல்லும் பணிகளை சந்திரயான்-2 இன்று தொடங்கும் – இஸ்ரோ

கடந்த ஜூலை 22 -ஆம் தேதி சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த நிலையில்  புவி வட்டப்பாதையிலிருந்து நிலவின் வட்டப்பாதைக்கு செல்லும் பணிகளை சந்திரயான்-2 இன்று தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.மேலும் ஆகஸ்ட் 14ந் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து நிலவை நோக்கி சந்திரயான் 2 புறப்படும். ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் சந்திரயான்-2, நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் என்றும்  இஸ்ரோ தெரிவித்துள்ளது.