Rashid khan angry [File Image]
ரஷீத் கான் : கிங்ஸ்டவுனில் உள்ள செயின்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை 2024 டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதியது. இந்த போட்டியின் போது விரக்தியில் ஒரு கட்டத்தில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் தனது பேட்டை கோபத்துடன் தரையில் வீசிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், ரஷீத் கான் பந்தை எதிர்கொண்டு இரண்டு ரன்கள் ஓட்டத்திற்கு முயற்சி செய்தார். அப்போது, அவருடன் களத்தில் நின்று கொண்டு இருந்த கரீம் ஜனத் இரண்டாவது ரன்னை எடுக்க மறுத்துவிட்டார், இதன் காரணமாக ரஷீத் கான் மிகவும் ஆத்திரம் அடைந்தார்.
இரண்டாவது ரன் எடுக்க பாதி தூரம் ரஷீத் கான் ஓடி வந்த நிலையில், மறுமுனையில் நின்று கொண்டு இருந்த கரீம் ஜனத் வேண்டாம் என்று கூறினார். கடுமையாக கோபப்பட்ட ரஷீத் கான் கூப்பிட்டா ஓடி வரமாட்டியா என்பது போல செய்கை காட்டி கையில் வைத்து இருந்த பேட்டை கோபத்துடன் தூக்கி கரீம் ஜனத் பக்கத்தில் வீசினார். இதனால் கரீம் ஜனத் அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் பிறகு, மழை அவ்வப்போது குறிக்கிட்டதன் காரணமாக 1 ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கும் 114 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து, பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 17.5 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும்…
சுரேஷ் ரெய்னா : இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…
குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…