கோவையில் திமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி..!

கோவையில், திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டி ஒட்டியவர்களை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க வினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திமுக பெண் தொண்டர் சித்ரகலா என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

தீக்குளிக்க முயன்ற சித்ரகலாவை காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர்.