Dead [File Image]
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி வந்த நேரத்தில் அதனை மாவட்ட ஆட்சியர் ஷ்ர்வன் குமார் மறுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதிக்கு அருகே உள்ள கருணாபுரத்தில் சந்தேகத்திற்கிடமாக 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த சுரேஷ், பிரவீன், ஜெகதீஸ், சேகர் ஆகியோர்உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கண்ட 4 பேரும் கள்ளச்சாராயம் அருந்தியதால் தான் உயிரிழந்தனர் என பரவலான குற்றசாட்டுகளை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முன்வைத்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், மாநில அரசு கள்ளச்சாராயம் ஒழிப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இப்படியான சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓர் செய்தி குறிப்பு வெளியானது. அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துவிட்டதாக சமூகவலைதளங்கள் மற்றும் செய்தி தொலைகாட்சிகளில் செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் விசாரணை நடைபெற்று, உடற்கூராய்வுமூலம் உண்மை நிலவரம் அறியும் வரை , இதுபோன்ற செய்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டது.
மேலும், இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளிக்கையில், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த 4 பேரும் கள்ளச்சாராயம் அருந்தியதால் தான் உயிரிழந்தனர் என போலியான செய்திகள் வெளியாகி வருகின்றன. உயிரிழந்த ஒருவற்கு குடிபழக்கம் இல்லை. அவர்கள் வயிற்று வலி, வலிப்பு உள்ளிட்ட மருத்துவ கரணங்கள் இருக்கிறது. உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராயத்தால் தான் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தது என மருத்துவர்களோ, காவல்துறையோ இன்னும் உறுதிபட கூறவில்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
கமல்ஹாசன் : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதை தாண்டி கதை, திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம் என பல விஷயங்களில் நன்கு அறிந்தவராக இருக்கிறார். இயக்குனராக அவர் ஹே ரேம்,…
டீன்ஸ் : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக 'டீன்ஸ்' என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்து…
ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில்…
பிசிசிஐ : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர். அதனை இந்திய வீரர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்கள் என்பதை…
மின்தடை : நாளை ( ஜூலை 9 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடசென்னை மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை,…
சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி…