தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்: 47 பேர் பலி.. 30 பேர் கவலைக்கிடம்.! ஆட்சியர் தகவல்.!

கள்ளக்குறிச்சி; கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியவர்க்ளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பல்வேறு தகவல்களை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதில், இதுவரை, கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியவர்களில் 165 பேர் உள்நோயாளிகளாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த 165 பேரில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் சிகிசை பெற்று வருகின்றனர். அதில், 50-60 பேர் உடல்நலம் தேறி வருகின்றனர். 5,6 பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 30 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுதான் இப்போதைய நிலைமை.

சிகிச்சை பெற்றுவபவர்களை 24 மணிநேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். நேற்று வரை 29 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இறுதி சடங்குகளுக்கு காவல்துறையினர் உதவி வருகின்றனர்.

நேற்று வரை கள்ளக்குறிச்சியில் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் இல்லை. 27 நபர்களுக்கு நேற்று அரசு நிவாரணம் வழங்கப்பட்டது. எங்களது வேண்டுகோள் ஒன்றுதான், கள்ளச்சாராயம் அருந்தியதாக சந்தேகம் இருந்தால் கூட சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

முதல்வரின் அறிவுறுத்தல் பெயரில், பாதிக்கப்பட்ட அனைவரின் பொருளாதார நிலை குறித்து அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.  கள்ளச்சாராய நடமாட்டத்தை தடுக்க சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

Recent Posts

ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ! இபிஎஸ் பரபரப்பு குற்றசாட்டு.!

சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி…

27 seconds ago

என்ன நடந்தாலும் அதை மட்டும் மாற்றக்கூடாது…அபிஷேக் சர்மாவுக்கு அப்பா கூறிய அட்வைஸ்!!

அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக…

42 mins ago

தமிழகத்தில் இவர்கள் மட்டும் இனி கட்டணமின்றி மண் எடுக்கலாம்.!

சென்னை : பாசனத் தொட்டிகள், குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து வண்டல்மன் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள்…

47 mins ago

8ம் வகுப்பு போதும் ..! அரசாங்க அலுவலக உதவியாளர் வேலை உங்களுக்கு தான் ..!

வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு : தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணிகளுக்கு…

52 mins ago

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம்.! முக்கிய விவரங்கள் இதோ…

டெல்லி: 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் ரஷ்யா சென்றடைய உள்ளார். பிரதமர் மோடி இன்று…

1 hour ago

சென்னை காவல் ஆணையர் இடமாற்றம்.! தமிழக அரசு திடீர் உத்தரவு.!

சென்னை: சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக…

1 hour ago