சென்னையில் இன்று 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் – சென்னை மாநகராட்சி

சென்னையில் மட்டும் தற்போது வரை 48 டன் பட்டாசு குப்பைகள் சென்னை மாநகராட்சி சார்பில் அகற்றபட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசு தான் பலரின் சந்தோசமாக இருக்கும். அந்த வகையில், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் பட்டாசுகளை விரும்பி வெடிப்பதுண்டு.

இந்நிலையில், தமிழக முழுவதும், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில், நேற்று பொதுமக்கள் வெடித்த பட்டாசுகளில், சென்னையில் மட்டும் தற்போது வரை 48 டன் பட்டாசு குப்பைகள் சென்னை மாநகராட்சி சார்பில் அகற்றபட்டுள்ளது. இந்த பணிகள் இன்றும் நாளையும் தொடர்ந்து பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த வருடம் மொத்தமாக 87 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.