#IPL2021: ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்.. புதிய கேப்டனை அறிவித்த டெல்லி கேபிட்டல்ஸ்! வாழ்த்தும் முன்னனி வீரர்கள்!

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுரேஷ் ரெய்னா உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். அதனைதொடர்ந்து அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் விளையாடமாட்டார் என அறிவித்தார். அதனைதொடர்ந்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பதவி வகிக்கிறார். அவர் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பந்த், ஷிகர் தவான் அல்லது ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர்களின் ஒருவர் கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அணி அறிவித்துள்ளது. இதற்கு சுரேஷ் ரெய்னா, உள்ளிட்ட முன்னிலை வீரர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Recent Posts

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

7 mins ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

44 mins ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

47 mins ago

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

1 hour ago

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

2 hours ago

கேரளாவில் அதிர்ச்சி.. பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி தூக்கி வீசிய கொடூரம்.!

Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…

2 hours ago