COVID-19 : பலி எண்ணிக்கை 2,788ஆக உயர்வு.!

  • COVID-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,824-ஐ எட்டியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் பரவத்தொடங்கிய COVID-19 வைரஸ்
தற்போது உலகின் 30-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.

இந்த வைரசால் சீனாவில் நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 44 பேர் உயிரிழந்து, நாடு முழுவதும் 2,788-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 327 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,824-ஐ எட்டியுள்ளது என தேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே கோர தாக்குதலுக்கு ஈரானில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.