அமெரிக்காவில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை கொன்று குவிக்கும் கொரோனா!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், நேற்று மட்டும் 2,341 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸ் நோயானது பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், உலக நாடுகள் முழுவதும், அச்சத்தில் உள்ள நிலையில், இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு நாட்டு அரசும்,  பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொரோனாவால் கொள்ளையாடப்படுகிறது. இதனை தடுப்பதற்கு அந்நாட்டு அரசு பல முயற்சிகளில் ஈடுபட்டாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் 2,341 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 47,659 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 849,092 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.