சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

கொரோனா தொற்றானது முதல் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரானா தொற்று உயர தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் இருந்து வருவோருக்கு கொரோனா சோதனை செய்வது பற்றி மத்திய அரசின் அறிவுறுத்தல்படி பின்பற்றப்படும் என்றும், விமான நிலையங்களில் ஆர்டிஐ பரிசோதனை எடுக்க தேவையில்லை என்று WHO கூறியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment