சென்னையில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா உறுதி

சென்னையில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது .இதுவரை மொத்தமாக 1257 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது.இன்று மட்டும் சென்னையில்  203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது.